Tuesday, December 24, 2013

விடியும் வேளை உன்னொடு பேசுகின்றேன்
விரையும் நேரங்களில்
எல்லாம் உன்னோடு
பேசுகிறேன்
வேலையின் சிறு இடைவெளியில்
உன்னோடு பேசுகிறேன்
வீதிவழியே போகையிலும்
உன்னோடு பேசுகின்றேன்
காணாத போதும் உன்னோடுபேசுகின்றேன
கனவில்கூட உன்னோடு பேசுகின்றேன்
நேரில்உஎன்னைகாணும் போதும்
உண்மையாகவே நீ பேசும் போதும்
மட்டுமே
பேசாமல் இருக்கிறேன்
உன்னோடு

Thursday, December 19, 2013

மரம் அசைய
கிளை அசைய
இலை அசைய
பூவும்  அசைய
காற்று வேண்டும்
நான் அசைவதற்கும்
நீ வேண்டும்
எப்போதும்

Wednesday, December 11, 2013

உயிரினை உருக்கி
உணர்வினை தொலைத்து
கசிந்து உருகும்
காதல் மொழிகள் காணாமல் போயின…

வாசல் பார்த்து வருகை நோக்கி
பாசத்தோடு ஏங்கி கிடக்கும்
விழிகள் இரண்டும்
தூரப்போயின…

மனசு முழுக்க மல்லிகை
மணக்கும்
சுகந்த நாட்கள் எல்லாம்
எங்கே நடைபோட்டன..

கைகள் சேர்த்து
கனவுகள் கோர்த்து
கவிதைகள் படித்த காலங்கள் கூட
காணாமல் போயின..

எல்லாம் எல்லாம்
எல்லாம் போயினும்
நீயும் நானும்
வேறு வேறாய் ஆயினும்
நமக்காய் இருந்த
நம் காதல் மட்டும்
அழியாது வாழும்
அகிலம் உள வரைக்கும்

என் நினைவுகளில் இருந்து
சற்றேனும் விலகாமல்
நீ இருக்கின்றாய்
இன்றும்….
உன்னைப் பார்த்த
உன்னோடு பேசிய
நினைவுகள் எல்லாம்…
நெஞ்சத்தில்…
மஞ்சம் போட்டிருக்கின்றன..
                           எனக்காக நீ காத்திருந்த பொழுதுகள்
                           தவிப்புக்கள்…
                            ஏக்கங்கள்…
                          என்மீதான உன் பாசம்
                          எல்லாமே உன்னை எனக்குள் வைத்திருக்கின்றன
  என் கண்களுக்குள் ஒளிந்து போன
என் கனவுகளை வெளியே
தந்து சென்றது நீ
காதல் இல்லை…
அதைக்கடந்த ஒரு புரிதல்
ஆழமான அன்பு…
                   தொலைந்து விட்ட பொருளை
                    எடுக்க முடியாது போல..உன்
                     அன்பில் தொலைந்து போனது
                      மனசும்…

நீ யில்லாத நாட்கள் தேடி
அலையும் விழிகள்…
உனக்காக உயிரின் நூலெடுத்து 
சேர்க்கும் வார்த்தைகள்
உன் நினைவுகளில் மட்டும் நகரும்
வாழ்க்கை…
உனக்கு தெரியுமா…
உன் ஞாபங்களில்தான் என் தனிமைகள்
கொல்லப்படுகின்றன….
உன்னோடு பேசுகின்றேன்
நீ இல்லாத பொழுதுகளிலும்
கவிதைக்கு வார்த்தைகள் 
தேடித்தேடி கோர்க்கின்றேன்
ஒவ்வொன்றிலும் நீயே…
என் மனம் அறிந்து
என் வாழ்வின் எல்லாமாய்
முழுவதுமாய்
நீயே இருக்கின்றாய்.. 
ப+க்கள்…
புல்வெளிகள்…பார்க்கையில்
தலைகோதும் தென்றல்
தொடுகையில்…
உன் முகம்…
உன் ஸ்பரிசம்…
என் சுவாசம் முழுவதும் உன்
வாசமே வியாபித்திருக்கின்றது

ஒரு நொடி உன் பார்வையில்
ஒரு யுகம் நான் தொலைத்தேன்
மறுபடி உனக்காய் பிறப்பேன்
மனதினை உனக்காய் தருவேன்

Tuesday, November 26, 2013

காலை நேரத்து பனித்துளி கோர்த்து
அழகாய் உன் பெயர்
எழுதி ரசிக்கையில்…
சில்லிடுகின்றது
மனசும்…
பனித்துளி போலவே…

Thursday, November 7, 2013

உன்னோடு பேசியவை
எனக்கு நினைவில் இல்லை
நாளை என்ன பேசப்போகிறேன்
அதுவும் தெரியவில்லை
ஆனால்
பேசிக்கொண்டே இருக்க வேண்டும்
நாள் முழவதும்
உன்னோடு…

கேட்டுப்பார்

என் இமைகளை கேட்டுப்பார்
உனைப்பார்க்கவேண்டி
இரவு முழுவதும்
விழித்திருந்த கதை
அவை சொல்லும்


என் உதடுகளை கேட்டுப்பார்
ஓயாமல்
உன்பெயரை
உச்சரிக்கும் விதத்தை
அவை சொல்லும்

என் மனதை கேட்டுப்பார்
உன்னை நினைத்தே
துடிக்கும்
இதயத்தின் நிலையை அது சொல்லும்

என் சுவாசத்தை கேட்டுப்பார்
என் வாசத்தை மட்டுமே
அறியும்
அன்பு நிலை
அதுவும் சொல்லும்.

Wednesday, October 30, 2013

மறந்திருக்க முடியுதில்லை
வஞ்சம் செய்து சென்றாய் என் நெஞ்சை
தூங்கும் போதும் செய்கிறாய் தொல்லை- இது
துயரமோ நான் அறிவேன் இல்லை

காலைச் சூரியன் கண்டால் உன்முகம்
சாலையோர பூவிலும் உன்முகம்
சாயங்கால வேளை வந்தும்
ஓயவில்லை உந்தன் ஞாபகம்

விழிகள் திறந்தால் எதிரில் தெரிவாய்
இதழ்கள் உரைக்கும் உன்பெயர் மெதுவாய்
வலிகள் நிறைந்ததே வாழ்வு என்று- உன்
வரவின்றி மனமும் ஏங்கிக் கொள்ளும்

இனியவன் பிரிவில் இன்முகம் சோரும்
இனியெப்போ தென உள்மனம் தேடும்
கனிமுகம் காண காதலில் சேர வருமொருநாளை
வரமாய் தேடும்

Wednesday, October 2, 2013

உனக்கான எனது
அழகிய கவிதை

எனக்கான பாதை
இதுவரை சரியாகத்தான் இருந்தது
எதிரே வந்தவன்
தடுமாறி மோதும் வரை…
காயம் எனக்கும் தான்

அவன் வார்த்தைகளில்
ஏதோ வசியம் வைத்திருக்க வேண்டும்
செல்லக் கொஞ்சலில்
கல்லும் கரைந்து தான் போகும்
நான் எம்மாத்திரம்
வசமானேன்..
வரமாகுமா…
சாபமாகுமா..?

உன் விதியின் பக்கங்களில்
என் பெயரும்
எங்கோ
எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது
காதலும் தான்…

வெற்றுக் காகிதம் ஒன்று
வெறுமையாய் கிடக்க
நீ வந்து கிறுக்கி சென்றாய்
அழகாய்……..

Tuesday, October 1, 2013

வேண்டாம் எனச் சொல்லும்
அறிவை
தூரத்தள்ளி
இல்லை.. நீதான் வேண்டும் என
அடம்பிடிக்கின்றது
மனசு….

நிலவே
என்னுடனேயே இரு
நினைவுகள் தந்து
எனை நீங்கிச் செல்பவனை
நினைத்திருக்கின்றேன்
நிலவே நீ என்னுடனே இரு
பிரியாதே

விட்டுவிடு



என் கண்ணெட்டும் தூரத்தில் அவள்
மனச் சிறகு விரித்து…
மகிழ்ச்சிக் கடலில்…
காத்திருக்கும் என்னை…
யோசிக்கவில்லை போலும்- நீ
யாசித்தாய்…
உனக்கும் தான் கொள்ளைப்பிரியம்
அவளில்..
தொட்டுவிட நினைக்கின்றாய்
எட்டிப்போகின்றாள்…
விட்டுவிடுவதாயில்லை நீ
மாய வலை விரித்து
காயம் செய்து…
சட்டென்று அவளை தொட்டுவிட்டாய்…
முதலில் அச்சம்..
அப்புறம் மிச்சமென்ன…
மறுபடியும் உன் தொடுகையில்
மறந்தாள் அவள் தன்னை …
சம்மதம் கிடைத்து விட்ட
வெற்றிக் களிப்பு உனக்கு…
அவளை உனக்குள் இழுத்து
உன்னுள் வீழ்த்தி
கட்டிப்புரட்டி கலவி செய்கிறாய்…
முடியவில்லை…
என்னினிய அலையே …
வேண்டாம் அவளை விட்டுவிடு
அவள் என்னவள்…


Friday, September 27, 2013

நீ சொல்வதெல்லாம்
பொய் எனத் தெரிந்தும்
நம்புகின்றது மனம்
குழந்தையாய்…

Thursday, September 26, 2013

அந்தி நேரம்
அடை மழை..
ஒற்றைக்குடை…
நனையவேயில்லை
மனசு மட்டும் நனைந்திருந்தது
தெப்பமாய்….

எல்லோரும்
உறங்கி கொண்டிருக்கிறார்கள்
விடியலுக்காக
நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன் 
உன்வரவுக்காக

Monday, September 23, 2013

மழையில் நனைந்த ஆடை போல்
உன் நினைவுகள் என்னுடன்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன…
நேசத்தின் பிடியில்…
அழகான காதல் கடலின்
ஒரு கரை நீ
மறு கரை நான்
ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவே
சிக்கித்தவிக்கின்றது..
நம் காதலும்
நினைவுகளும்…

நீ பேசாத போதெல்லாம்
நகரும் மணித்துளிகள்
நீ பேசும் மட்டும் ஏனோ..
ஒடிவிடுகின்றது…

Wednesday, September 18, 2013

நேற்று வரை …
உன்னை நினைத்ததில்லை
இப்போதெல்லாம் நினைக்காத
நொடியேயில்லை….

Tuesday, September 17, 2013

என் உறக்கத்தை திருடிவிட்டு
எப்படி உன்னால்
என் கனவுகளை
கேட்க முடிகின்றது

நீ உறங்குவதற்கு சரியான இடம்
என் விழிகள் தான் என்றால்…
இமைப்பதையே நிறுத்;தி வைப்பேன்
நீ விழிக்கும் வரை…

கவிதைகள் என் தோழமை
கவிதைகள்  நேசிப்பு…
கவிதைகள் என் பொழுது போக்கு..
இவையே
நாளை என்னை காயப்படுத்துமா…?


என்னால் உன்னை
காயப்படுத்த முடியாது
ஏனெனில் எனக்கு….

உன்னை நிரம்பவும் பிடிக்கும்
எதற்கும் ஈடாகாது
எனக்கான
உனது செல்லப்பெயர்கள்- நீ
உச்சரிக்கும் போதே
வியந்து விடுகின்றேன்

Monday, September 16, 2013

கதைக்கவே கூடாதென்று
மனது நினைத்தாலும்- உன்
ஒரு நொடி அழைப்பில்
எல்லாமே மறந்து விடுகின்றது.

எனக்கும் சம்மதம்தான்…
நாள் முழுவதும் கதைப்பதற்கு…
உன்னோடென்றால்……….

விடுமுறை நாட்கள் எல்லாம் என் விரோதிகள்
தெரியுமா உனக்கு…
உன்னைப்பார்க்க முடியாதே..
உன்னோடு பேச முடியாதே…

எனக்கு உன்னை நிரம்புவும்
 பிடிக்கும்…
காரணம் ஏனோ தெரியவில்லை…
எல்லாவற்றையும் மறக்க வைத்து
எப்படி
உன்னை மட்டும் நினைக்க வைத்தாய்

கையை நீட்டினால் ஓடிவரும்…
சிறு குழந்தையை போல..
இன்று என் மனம்
உன்னிடம்…


நேற்று வரை பிடித்த உறக்கம்
இன்று பிடிக்கவில்லை..
உணவு பிடிக்கவில்லை…
யாருடனும் பேசப் பிடிக்கவி;ல்லை
எதுவுமே பிடிக்கவில்லை
உன்னைத்தவிர…

Wednesday, September 11, 2013

நீ அழைக்கும் போது மட்டும்தான்
என் பெயர்கூட
எனக்கு பிடிக்கின்றது.

இந்த செல்போனாக நான்
 இருந்திருக்க கூடாதா
எப்போதும்...
உன்னுடனே 
என் கனவு நீ என்பதால்தான்....
தூக்கத்தை தொலைப்பதற்கு
நான் விரும்புவதேயில்லை.