கரைதேடும் அலைகள்
என் கவி வலைகளில் இது காதலுக்காக மட்டும்
Monday, September 16, 2013
கதைக்கவே கூடாதென்று
மனது நினைத்தாலும்- உன்
ஒரு நொடி அழைப்பில்
எல்லாமே மறந்து விடுகின்றது.
எனக்கும் சம்மதம்தான்…
நாள் முழுவதும் கதைப்பதற்கு…
உன்னோடென்றால்……….
விடுமுறை நாட்கள் எல்லாம் என் விரோதிகள்
தெரியுமா உனக்கு…
உன்னைப்பார்க்க முடியாதே..
உன்னோடு பேச முடியாதே…
எனக்கு உன்னை நிரம்புவும்
பிடிக்கும்…
காரணம் ஏனோ தெரியவில்லை…
எல்லாவற்றையும் மறக்க வைத்து
எப்படி
உன்னை மட்டும் நினைக்க வைத்தாய்
கையை நீட்டினால் ஓடிவரும்…
சிறு குழந்தையை போல..
இன்று என் மனம்
உன்னிடம்…
…
நேற்று வரை பிடித்த உறக்கம்
இன்று பிடிக்கவில்லை..
உணவு பிடிக்கவில்லை…
யாருடனும் பேசப் பிடிக்கவி;ல்லை
எதுவுமே பிடிக்கவில்லை
உன்னைத்தவிர…
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)