Wednesday, December 11, 2013

உயிரினை உருக்கி
உணர்வினை தொலைத்து
கசிந்து உருகும்
காதல் மொழிகள் காணாமல் போயின…

வாசல் பார்த்து வருகை நோக்கி
பாசத்தோடு ஏங்கி கிடக்கும்
விழிகள் இரண்டும்
தூரப்போயின…

மனசு முழுக்க மல்லிகை
மணக்கும்
சுகந்த நாட்கள் எல்லாம்
எங்கே நடைபோட்டன..

கைகள் சேர்த்து
கனவுகள் கோர்த்து
கவிதைகள் படித்த காலங்கள் கூட
காணாமல் போயின..

எல்லாம் எல்லாம்
எல்லாம் போயினும்
நீயும் நானும்
வேறு வேறாய் ஆயினும்
நமக்காய் இருந்த
நம் காதல் மட்டும்
அழியாது வாழும்
அகிலம் உள வரைக்கும்

No comments:

Post a Comment