Monday, September 23, 2013

மழையில் நனைந்த ஆடை போல்
உன் நினைவுகள் என்னுடன்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன…
நேசத்தின் பிடியில்…
அழகான காதல் கடலின்
ஒரு கரை நீ
மறு கரை நான்
ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவே
சிக்கித்தவிக்கின்றது..
நம் காதலும்
நினைவுகளும்…

நீ பேசாத போதெல்லாம்
நகரும் மணித்துளிகள்
நீ பேசும் மட்டும் ஏனோ..
ஒடிவிடுகின்றது…