Wednesday, December 11, 2013

நீ யில்லாத நாட்கள் தேடி
அலையும் விழிகள்…
உனக்காக உயிரின் நூலெடுத்து 
சேர்க்கும் வார்த்தைகள்
உன் நினைவுகளில் மட்டும் நகரும்
வாழ்க்கை…
உனக்கு தெரியுமா…
உன் ஞாபங்களில்தான் என் தனிமைகள்
கொல்லப்படுகின்றன….
உன்னோடு பேசுகின்றேன்
நீ இல்லாத பொழுதுகளிலும்
கவிதைக்கு வார்த்தைகள் 
தேடித்தேடி கோர்க்கின்றேன்
ஒவ்வொன்றிலும் நீயே…
என் மனம் அறிந்து
என் வாழ்வின் எல்லாமாய்
முழுவதுமாய்
நீயே இருக்கின்றாய்.. 
ப+க்கள்…
புல்வெளிகள்…பார்க்கையில்
தலைகோதும் தென்றல்
தொடுகையில்…
உன் முகம்…
உன் ஸ்பரிசம்…
என் சுவாசம் முழுவதும் உன்
வாசமே வியாபித்திருக்கின்றது

ஒரு நொடி உன் பார்வையில்
ஒரு யுகம் நான் தொலைத்தேன்
மறுபடி உனக்காய் பிறப்பேன்
மனதினை உனக்காய் தருவேன்

No comments:

Post a Comment