Wednesday, December 11, 2013

உயிரினை உருக்கி
உணர்வினை தொலைத்து
கசிந்து உருகும்
காதல் மொழிகள் காணாமல் போயின…

வாசல் பார்த்து வருகை நோக்கி
பாசத்தோடு ஏங்கி கிடக்கும்
விழிகள் இரண்டும்
தூரப்போயின…

மனசு முழுக்க மல்லிகை
மணக்கும்
சுகந்த நாட்கள் எல்லாம்
எங்கே நடைபோட்டன..

கைகள் சேர்த்து
கனவுகள் கோர்த்து
கவிதைகள் படித்த காலங்கள் கூட
காணாமல் போயின..

எல்லாம் எல்லாம்
எல்லாம் போயினும்
நீயும் நானும்
வேறு வேறாய் ஆயினும்
நமக்காய் இருந்த
நம் காதல் மட்டும்
அழியாது வாழும்
அகிலம் உள வரைக்கும்

என் நினைவுகளில் இருந்து
சற்றேனும் விலகாமல்
நீ இருக்கின்றாய்
இன்றும்….
உன்னைப் பார்த்த
உன்னோடு பேசிய
நினைவுகள் எல்லாம்…
நெஞ்சத்தில்…
மஞ்சம் போட்டிருக்கின்றன..
                           எனக்காக நீ காத்திருந்த பொழுதுகள்
                           தவிப்புக்கள்…
                            ஏக்கங்கள்…
                          என்மீதான உன் பாசம்
                          எல்லாமே உன்னை எனக்குள் வைத்திருக்கின்றன
  என் கண்களுக்குள் ஒளிந்து போன
என் கனவுகளை வெளியே
தந்து சென்றது நீ
காதல் இல்லை…
அதைக்கடந்த ஒரு புரிதல்
ஆழமான அன்பு…
                   தொலைந்து விட்ட பொருளை
                    எடுக்க முடியாது போல..உன்
                     அன்பில் தொலைந்து போனது
                      மனசும்…

நீ யில்லாத நாட்கள் தேடி
அலையும் விழிகள்…
உனக்காக உயிரின் நூலெடுத்து 
சேர்க்கும் வார்த்தைகள்
உன் நினைவுகளில் மட்டும் நகரும்
வாழ்க்கை…
உனக்கு தெரியுமா…
உன் ஞாபங்களில்தான் என் தனிமைகள்
கொல்லப்படுகின்றன….
உன்னோடு பேசுகின்றேன்
நீ இல்லாத பொழுதுகளிலும்
கவிதைக்கு வார்த்தைகள் 
தேடித்தேடி கோர்க்கின்றேன்
ஒவ்வொன்றிலும் நீயே…
என் மனம் அறிந்து
என் வாழ்வின் எல்லாமாய்
முழுவதுமாய்
நீயே இருக்கின்றாய்.. 
ப+க்கள்…
புல்வெளிகள்…பார்க்கையில்
தலைகோதும் தென்றல்
தொடுகையில்…
உன் முகம்…
உன் ஸ்பரிசம்…
என் சுவாசம் முழுவதும் உன்
வாசமே வியாபித்திருக்கின்றது

ஒரு நொடி உன் பார்வையில்
ஒரு யுகம் நான் தொலைத்தேன்
மறுபடி உனக்காய் பிறப்பேன்
மனதினை உனக்காய் தருவேன்