Wednesday, March 19, 2014

மௌனம் மட்டும் தான்
இதுநாள் வரை பிடித்தது
இப்போது பேசவும்
மெல்ல பிடிக்கின்றது
உன்னோடு என்றால்…

*****************************

புரியவில்லை
எப்படி உன் மீதான என் காதலை
உனக்குபுரிய வைப்பேன்
புரியவேயில்லை…..
*****************************

கொட்டிப்போன மழையில்
கொஞ்சமும் நனையவில்லை…
விட்டுப்போன பின்னே
சொட்ட சொட்ட நனைகின்றேன்
காதல் மழையில்..
******************************

எப்போதும் போல
இப்போது நானில்லை
முப்போதும்  என்னுடன்..நீ

Monday, March 17, 2014

உனக்கு தெரியுமா?
உன்குரலை கேட்க வேண்டும் என்பதற்காகவே
தொலைபேசி அருகில்.......
நாள்முழுதுமான
 என் காத்திருப்பு
உனக்கு தெரியுமா...?

இன்னோர் ஜென்மமா...
வேண்டவே வேண்டாம்
என்றேன்..
இப்போது தயார்
எத்தனை ஜென்மத்திற்கும்
அப்போதும் நீ கூடவருவாய் என்றால் மட்டும்...

Friday, January 31, 2014

நீ போய்வருவதாகத்தான் சொல்கின்றாய்;
போன பின்னர்
எதையோ இழந்ததாய்
தவிக்கும் மனது…
இருக்கும் வரைக்கும் புரியாத பாசம்
பிரிந்தபின்னர் வருவதே சோகம்

Thursday, January 30, 2014

உன்னுடன் கூடவே வருகின்ற
என்னோட மனசை
என்ன செய்ய…
உன்னைப் பார்க்கமால்
உறங்க மறுக்கும்
என் விழிகளை என்ன செய்ய..
உன்னோட குரலை கேட்காமல்
என் சொல்லை கேட்க மறுக்கும்
செவிகளை என் செய்ய…
எப்படிச் சொல்வேன் நான்
என்னை நீங்கி செல்லாதேயென…
செல்வதெனின் இவற்றிற்கு
ஏதாவது சொல்லிவிட்டுப்போ
நான் நிம்மதியாக இருக்கவேண்டும்
உன்னை நினைத்து அடம்பிக்கும்
இதுகளின் தொல்லையின்றி…..

Tuesday, December 24, 2013

விடியும் வேளை உன்னொடு பேசுகின்றேன்
விரையும் நேரங்களில்
எல்லாம் உன்னோடு
பேசுகிறேன்
வேலையின் சிறு இடைவெளியில்
உன்னோடு பேசுகிறேன்
வீதிவழியே போகையிலும்
உன்னோடு பேசுகின்றேன்
காணாத போதும் உன்னோடுபேசுகின்றேன
கனவில்கூட உன்னோடு பேசுகின்றேன்
நேரில்உஎன்னைகாணும் போதும்
உண்மையாகவே நீ பேசும் போதும்
மட்டுமே
பேசாமல் இருக்கிறேன்
உன்னோடு

Thursday, December 19, 2013

மரம் அசைய
கிளை அசைய
இலை அசைய
பூவும்  அசைய
காற்று வேண்டும்
நான் அசைவதற்கும்
நீ வேண்டும்
எப்போதும்

Wednesday, December 11, 2013

உயிரினை உருக்கி
உணர்வினை தொலைத்து
கசிந்து உருகும்
காதல் மொழிகள் காணாமல் போயின…

வாசல் பார்த்து வருகை நோக்கி
பாசத்தோடு ஏங்கி கிடக்கும்
விழிகள் இரண்டும்
தூரப்போயின…

மனசு முழுக்க மல்லிகை
மணக்கும்
சுகந்த நாட்கள் எல்லாம்
எங்கே நடைபோட்டன..

கைகள் சேர்த்து
கனவுகள் கோர்த்து
கவிதைகள் படித்த காலங்கள் கூட
காணாமல் போயின..

எல்லாம் எல்லாம்
எல்லாம் போயினும்
நீயும் நானும்
வேறு வேறாய் ஆயினும்
நமக்காய் இருந்த
நம் காதல் மட்டும்
அழியாது வாழும்
அகிலம் உள வரைக்கும்

என் நினைவுகளில் இருந்து
சற்றேனும் விலகாமல்
நீ இருக்கின்றாய்
இன்றும்….
உன்னைப் பார்த்த
உன்னோடு பேசிய
நினைவுகள் எல்லாம்…
நெஞ்சத்தில்…
மஞ்சம் போட்டிருக்கின்றன..
                           எனக்காக நீ காத்திருந்த பொழுதுகள்
                           தவிப்புக்கள்…
                            ஏக்கங்கள்…
                          என்மீதான உன் பாசம்
                          எல்லாமே உன்னை எனக்குள் வைத்திருக்கின்றன
  என் கண்களுக்குள் ஒளிந்து போன
என் கனவுகளை வெளியே
தந்து சென்றது நீ
காதல் இல்லை…
அதைக்கடந்த ஒரு புரிதல்
ஆழமான அன்பு…
                   தொலைந்து விட்ட பொருளை
                    எடுக்க முடியாது போல..உன்
                     அன்பில் தொலைந்து போனது
                      மனசும்…

நீ யில்லாத நாட்கள் தேடி
அலையும் விழிகள்…
உனக்காக உயிரின் நூலெடுத்து 
சேர்க்கும் வார்த்தைகள்
உன் நினைவுகளில் மட்டும் நகரும்
வாழ்க்கை…
உனக்கு தெரியுமா…
உன் ஞாபங்களில்தான் என் தனிமைகள்
கொல்லப்படுகின்றன….
உன்னோடு பேசுகின்றேன்
நீ இல்லாத பொழுதுகளிலும்
கவிதைக்கு வார்த்தைகள் 
தேடித்தேடி கோர்க்கின்றேன்
ஒவ்வொன்றிலும் நீயே…
என் மனம் அறிந்து
என் வாழ்வின் எல்லாமாய்
முழுவதுமாய்
நீயே இருக்கின்றாய்.. 
ப+க்கள்…
புல்வெளிகள்…பார்க்கையில்
தலைகோதும் தென்றல்
தொடுகையில்…
உன் முகம்…
உன் ஸ்பரிசம்…
என் சுவாசம் முழுவதும் உன்
வாசமே வியாபித்திருக்கின்றது

ஒரு நொடி உன் பார்வையில்
ஒரு யுகம் நான் தொலைத்தேன்
மறுபடி உனக்காய் பிறப்பேன்
மனதினை உனக்காய் தருவேன்

Tuesday, November 26, 2013

காலை நேரத்து பனித்துளி கோர்த்து
அழகாய் உன் பெயர்
எழுதி ரசிக்கையில்…
சில்லிடுகின்றது
மனசும்…
பனித்துளி போலவே…

Thursday, November 7, 2013

உன்னோடு பேசியவை
எனக்கு நினைவில் இல்லை
நாளை என்ன பேசப்போகிறேன்
அதுவும் தெரியவில்லை
ஆனால்
பேசிக்கொண்டே இருக்க வேண்டும்
நாள் முழவதும்
உன்னோடு…