Tuesday, October 1, 2013

வேண்டாம் எனச் சொல்லும்
அறிவை
தூரத்தள்ளி
இல்லை.. நீதான் வேண்டும் என
அடம்பிடிக்கின்றது
மனசு….

நிலவே
என்னுடனேயே இரு
நினைவுகள் தந்து
எனை நீங்கிச் செல்பவனை
நினைத்திருக்கின்றேன்
நிலவே நீ என்னுடனே இரு
பிரியாதே

விட்டுவிடு



என் கண்ணெட்டும் தூரத்தில் அவள்
மனச் சிறகு விரித்து…
மகிழ்ச்சிக் கடலில்…
காத்திருக்கும் என்னை…
யோசிக்கவில்லை போலும்- நீ
யாசித்தாய்…
உனக்கும் தான் கொள்ளைப்பிரியம்
அவளில்..
தொட்டுவிட நினைக்கின்றாய்
எட்டிப்போகின்றாள்…
விட்டுவிடுவதாயில்லை நீ
மாய வலை விரித்து
காயம் செய்து…
சட்டென்று அவளை தொட்டுவிட்டாய்…
முதலில் அச்சம்..
அப்புறம் மிச்சமென்ன…
மறுபடியும் உன் தொடுகையில்
மறந்தாள் அவள் தன்னை …
சம்மதம் கிடைத்து விட்ட
வெற்றிக் களிப்பு உனக்கு…
அவளை உனக்குள் இழுத்து
உன்னுள் வீழ்த்தி
கட்டிப்புரட்டி கலவி செய்கிறாய்…
முடியவில்லை…
என்னினிய அலையே …
வேண்டாம் அவளை விட்டுவிடு
அவள் என்னவள்…