Friday, February 17, 2012

நினைவு









உன்னை மறந்து
விட்டதாகத்தான் எல்லோரும்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என் நினைவே
நீதான் என்பது
அவர்களுக்கெங்கே
தெரியப் போகின்றது
உனக்கும் தான்

Tuesday, February 14, 2012

அன்பே வா....












உன் பெயரை சொன்னாலே
உள் நெஞ்சம் தித்திக்கும்
உன்னோடு வந்தாலே
என் பாதை பூப்பூக்கும்
மானே...என் பெண் மானே...

பூவெல்லாம் உன் வாசம்
புன்னகையில் உன் நேசம்
காலம் எல்லாம் என்னோடு
கரம் சேர நீ வேண்டும்...

கண்ணோடு ஒளியாய் வா
விண்ணோடு நிலவாய் வா
என்னோடு துணையாய் வா
எண்ணமெல்லாம் நினைவாய் வாழ்

Thursday, February 2, 2012

சிறைச்சாலை



















சித்திரவதை இல்லாத
அழகிய சிறை
உன் இதயம்...
ஆயுள் வரைக்கும் இருக்கலாம்
கைதியாக

 

Wednesday, February 1, 2012

உன் காதலும்,என் காதலும்









பெண்ணே
என் காதலோ
வானத்தில் நீலம் போல
நிரந்தரமானது
உன் காதலோ
முகில் போலது
நிலையாய்
நிற்பதேயில்லை

செல்போன்


என் செல்போனுக்கும்
உனக்கும்
ஒரு  ஓற்றுமை...
எப்போதும்
சிணுங்கியபடியே...

ஞாபக சக்தி


என்னுடைய பொருட்களை
எங்கெங்கெல்லாமோ வைத்து விட்டு
தினம் தினம்
தேடும் பொழுது
என் ஞாபக சக்தியை கடிந்து கொள்கின்றேன்
அதுவே...
உன்னுடையவற்றை எல்லாம் தேடாமலே
எடுத்து தரும் பொழுது வியந்து கொள்கின்றேன்

Tuesday, January 31, 2012

அன்பின் சக்தி


எனக்கும் உனக்குமான
சில சண்டைகளில்
விட்டுத்தரலாமா என நான்
யோசிக்கும் போதே
எனக்காக ...நீ விட்டுத் தந்து விடுவாய்
என்னை வியக்க வைத்து...