Wednesday, December 11, 2013

என் நினைவுகளில் இருந்து
சற்றேனும் விலகாமல்
நீ இருக்கின்றாய்
இன்றும்….
உன்னைப் பார்த்த
உன்னோடு பேசிய
நினைவுகள் எல்லாம்…
நெஞ்சத்தில்…
மஞ்சம் போட்டிருக்கின்றன..
                           எனக்காக நீ காத்திருந்த பொழுதுகள்
                           தவிப்புக்கள்…
                            ஏக்கங்கள்…
                          என்மீதான உன் பாசம்
                          எல்லாமே உன்னை எனக்குள் வைத்திருக்கின்றன
  என் கண்களுக்குள் ஒளிந்து போன
என் கனவுகளை வெளியே
தந்து சென்றது நீ
காதல் இல்லை…
அதைக்கடந்த ஒரு புரிதல்
ஆழமான அன்பு…
                   தொலைந்து விட்ட பொருளை
                    எடுக்க முடியாது போல..உன்
                     அன்பில் தொலைந்து போனது
                      மனசும்…

No comments:

Post a Comment