Thursday, January 30, 2014

உன்னுடன் கூடவே வருகின்ற
என்னோட மனசை
என்ன செய்ய…
உன்னைப் பார்க்கமால்
உறங்க மறுக்கும்
என் விழிகளை என்ன செய்ய..
உன்னோட குரலை கேட்காமல்
என் சொல்லை கேட்க மறுக்கும்
செவிகளை என் செய்ய…
எப்படிச் சொல்வேன் நான்
என்னை நீங்கி செல்லாதேயென…
செல்வதெனின் இவற்றிற்கு
ஏதாவது சொல்லிவிட்டுப்போ
நான் நிம்மதியாக இருக்கவேண்டும்
உன்னை நினைத்து அடம்பிக்கும்
இதுகளின் தொல்லையின்றி…..