Wednesday, October 30, 2013

மறந்திருக்க முடியுதில்லை
வஞ்சம் செய்து சென்றாய் என் நெஞ்சை
தூங்கும் போதும் செய்கிறாய் தொல்லை- இது
துயரமோ நான் அறிவேன் இல்லை

காலைச் சூரியன் கண்டால் உன்முகம்
சாலையோர பூவிலும் உன்முகம்
சாயங்கால வேளை வந்தும்
ஓயவில்லை உந்தன் ஞாபகம்

விழிகள் திறந்தால் எதிரில் தெரிவாய்
இதழ்கள் உரைக்கும் உன்பெயர் மெதுவாய்
வலிகள் நிறைந்ததே வாழ்வு என்று- உன்
வரவின்றி மனமும் ஏங்கிக் கொள்ளும்

இனியவன் பிரிவில் இன்முகம் சோரும்
இனியெப்போ தென உள்மனம் தேடும்
கனிமுகம் காண காதலில் சேர வருமொருநாளை
வரமாய் தேடும்