உன் பெயரை சொன்னாலே
உள் நெஞ்சம் தித்திக்கும்
உன்னோடு வந்தாலே
என் பாதை பூப்பூக்கும்
மானே...என் பெண் மானே...
பூவெல்லாம் உன் வாசம்
புன்னகையில் உன் நேசம்
காலம் எல்லாம் என்னோடு
கரம் சேர நீ வேண்டும்...
கண்ணோடு ஒளியாய் வா
விண்ணோடு நிலவாய் வா
என்னோடு துணையாய் வா
எண்ணமெல்லாம் நினைவாய் வாழ்