நீ சொல்வதெல்லாம்
பொய் எனத் தெரிந்தும்
நம்புகின்றது மனம்
குழந்தையாய்…
Thursday, September 26, 2013
அந்தி நேரம்
அடை மழை..
ஒற்றைக்குடை…
நனையவேயில்லை
மனசு மட்டும் நனைந்திருந்தது
தெப்பமாய்….
எல்லோரும்
உறங்கி கொண்டிருக்கிறார்கள்
விடியலுக்காக
நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன்
உன்வரவுக்காக
Monday, September 23, 2013
மழையில் நனைந்த ஆடை போல்
உன் நினைவுகள் என்னுடன்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன…
நேசத்தின் பிடியில்…
அழகான காதல் கடலின்
ஒரு கரை நீ
மறு கரை நான்
ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவே
சிக்கித்தவிக்கின்றது..
நம் காதலும்
நினைவுகளும்…
நீ பேசாத போதெல்லாம்
நகரும் மணித்துளிகள்
நீ பேசும் மட்டும் ஏனோ..
ஒடிவிடுகின்றது…
Wednesday, September 18, 2013
நேற்று வரை …
உன்னை நினைத்ததில்லை
இப்போதெல்லாம் நினைக்காத
நொடியேயில்லை….
Tuesday, September 17, 2013
என் உறக்கத்தை திருடிவிட்டு
எப்படி உன்னால்
என் கனவுகளை
கேட்க முடிகின்றது
நீ உறங்குவதற்கு சரியான இடம்
என் விழிகள் தான் என்றால்…
இமைப்பதையே நிறுத்;தி வைப்பேன்
நீ விழிக்கும் வரை…
கவிதைகள் என் தோழமை
கவிதைகள் நேசிப்பு…
கவிதைகள் என் பொழுது போக்கு..
இவையே
நாளை என்னை காயப்படுத்துமா…?
என்னால் உன்னை காயப்படுத்த முடியாது ஏனெனில் எனக்கு…. உன்னை நிரம்பவும் பிடிக்கும்
எதற்கும் ஈடாகாது
எனக்கான
உனது செல்லப்பெயர்கள்- நீ
உச்சரிக்கும் போதே
வியந்து விடுகின்றேன்
Monday, September 16, 2013
கதைக்கவே கூடாதென்று
மனது நினைத்தாலும்- உன்
ஒரு நொடி அழைப்பில்
எல்லாமே மறந்து விடுகின்றது.
எனக்கும் சம்மதம்தான்…
நாள் முழுவதும் கதைப்பதற்கு…
உன்னோடென்றால்……….
விடுமுறை நாட்கள் எல்லாம் என் விரோதிகள்
தெரியுமா உனக்கு…
உன்னைப்பார்க்க முடியாதே..
உன்னோடு பேச முடியாதே…
எனக்கு உன்னை நிரம்புவும்
பிடிக்கும்…
காரணம் ஏனோ தெரியவில்லை…
எல்லாவற்றையும் மறக்க வைத்து
எப்படி
உன்னை மட்டும் நினைக்க வைத்தாய்
கையை நீட்டினால் ஓடிவரும்…
சிறு குழந்தையை போல..
இன்று என் மனம்
உன்னிடம்…
…
நேற்று வரை பிடித்த உறக்கம்
இன்று பிடிக்கவில்லை..
உணவு பிடிக்கவில்லை…
யாருடனும் பேசப் பிடிக்கவி;ல்லை
எதுவுமே பிடிக்கவில்லை
உன்னைத்தவிர…
Wednesday, September 11, 2013
நீ அழைக்கும் போது மட்டும்தான்
என் பெயர்கூட
எனக்கு பிடிக்கின்றது.
இந்த செல்போனாக நான்
இருந்திருக்க கூடாதா
எப்போதும்...
உன்னுடனே
என் கனவு நீ என்பதால்தான்....
தூக்கத்தை தொலைப்பதற்கு
நான் விரும்புவதேயில்லை.