கரைதேடும் அலைகள்
என் கவி வலைகளில் இது காதலுக்காக மட்டும்
Tuesday, September 17, 2013
என் உறக்கத்தை திருடிவிட்டு
எப்படி உன்னால்
என் கனவுகளை
கேட்க முடிகின்றது
நீ உறங்குவதற்கு சரியான இடம்
என் விழிகள் தான் என்றால்…
இமைப்பதையே நிறுத்;தி வைப்பேன்
நீ விழிக்கும் வரை…
கவிதைகள் என் தோழமை
கவிதைகள் நேசிப்பு…
கவிதைகள் என் பொழுது போக்கு..
இவையே
நாளை என்னை காயப்படுத்துமா…?
என்னால் உன்னை
காயப்படுத்த முடியாது
ஏனெனில் எனக்கு….
உன்னை நிரம்பவும் பிடிக்கும்
எதற்கும் ஈடாகாது
எனக்கான
உனது செல்லப்பெயர்கள்- நீ
உச்சரிக்கும் போதே
வியந்து விடுகின்றேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)