Thursday, November 7, 2013

உன்னோடு பேசியவை
எனக்கு நினைவில் இல்லை
நாளை என்ன பேசப்போகிறேன்
அதுவும் தெரியவில்லை
ஆனால்
பேசிக்கொண்டே இருக்க வேண்டும்
நாள் முழவதும்
உன்னோடு…

கேட்டுப்பார்

என் இமைகளை கேட்டுப்பார்
உனைப்பார்க்கவேண்டி
இரவு முழுவதும்
விழித்திருந்த கதை
அவை சொல்லும்


என் உதடுகளை கேட்டுப்பார்
ஓயாமல்
உன்பெயரை
உச்சரிக்கும் விதத்தை
அவை சொல்லும்

என் மனதை கேட்டுப்பார்
உன்னை நினைத்தே
துடிக்கும்
இதயத்தின் நிலையை அது சொல்லும்

என் சுவாசத்தை கேட்டுப்பார்
என் வாசத்தை மட்டுமே
அறியும்
அன்பு நிலை
அதுவும் சொல்லும்.