Wednesday, March 19, 2014

மௌனம் மட்டும் தான்
இதுநாள் வரை பிடித்தது
இப்போது பேசவும்
மெல்ல பிடிக்கின்றது
உன்னோடு என்றால்…

*****************************

புரியவில்லை
எப்படி உன் மீதான என் காதலை
உனக்குபுரிய வைப்பேன்
புரியவேயில்லை…..
*****************************

கொட்டிப்போன மழையில்
கொஞ்சமும் நனையவில்லை…
விட்டுப்போன பின்னே
சொட்ட சொட்ட நனைகின்றேன்
காதல் மழையில்..
******************************

எப்போதும் போல
இப்போது நானில்லை
முப்போதும்  என்னுடன்..நீ

Monday, March 17, 2014

உனக்கு தெரியுமா?
உன்குரலை கேட்க வேண்டும் என்பதற்காகவே
தொலைபேசி அருகில்.......
நாள்முழுதுமான
 என் காத்திருப்பு
உனக்கு தெரியுமா...?

இன்னோர் ஜென்மமா...
வேண்டவே வேண்டாம்
என்றேன்..
இப்போது தயார்
எத்தனை ஜென்மத்திற்கும்
அப்போதும் நீ கூடவருவாய் என்றால் மட்டும்...

Friday, January 31, 2014

நீ போய்வருவதாகத்தான் சொல்கின்றாய்;
போன பின்னர்
எதையோ இழந்ததாய்
தவிக்கும் மனது…
இருக்கும் வரைக்கும் புரியாத பாசம்
பிரிந்தபின்னர் வருவதே சோகம்

Thursday, January 30, 2014

உன்னுடன் கூடவே வருகின்ற
என்னோட மனசை
என்ன செய்ய…
உன்னைப் பார்க்கமால்
உறங்க மறுக்கும்
என் விழிகளை என்ன செய்ய..
உன்னோட குரலை கேட்காமல்
என் சொல்லை கேட்க மறுக்கும்
செவிகளை என் செய்ய…
எப்படிச் சொல்வேன் நான்
என்னை நீங்கி செல்லாதேயென…
செல்வதெனின் இவற்றிற்கு
ஏதாவது சொல்லிவிட்டுப்போ
நான் நிம்மதியாக இருக்கவேண்டும்
உன்னை நினைத்து அடம்பிக்கும்
இதுகளின் தொல்லையின்றி…..